ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் துலிப் தோட்ட மலர்கள். ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டம் இதுவே ஆகும். இங்கு ஆண்டுதோறும் துலிப் மலர் கண்காட்சி நடைபெறும். கண்களை கவரும் வண்ணத்தில் மலர்ந்துள்ள துலிப் மலர்கள். சீசன் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.