அப்போது கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் திரு.வி.க.நகர் மண்டல அலுவலர் முருகன், செயற்பொறியாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மற்ற நபர்கள் எவ்வாறு பணியில் ஈடுபட்டுள்ளார்கள், எவ்வாறு வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு பணி மேற்கொண்டனர்.
பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டபோது, நேரில் சென்ற அதிகாரிகள் அந்த பணிகளை பார்வையிட்டு அதன் பின்பு ஒவ்வொரு பகுதியாக சென்று தேர்தல் அலுவலர்கள் எவ்வாறு பணிகள் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.