மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன் 3ம் தேதி வரை பயன்படுத்தலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன் 30ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணச்சலுகை அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இலவச பயணச்சலுகை 2023-2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பழைய பஸ்பாசை வைத்திருக்கும் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வபவர்கள் என அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஜூன் 30ம்தேதி வரை 3 மாதத்திற்கு, பயணம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், காஞ்சிபுரம் முகவரி மற்றும் 044-2999 8040 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வேண்டிய விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

டயர் வெடித்ததால் சென்டர் மீடியனில் மோதிய தனியார் பஸ்

கல்லூரி வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது