பாஜ எம்பியை கண்டித்து திருப்போரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்: இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ எம்பியும், இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில், திருப்போரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மீனவர் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் ஜஹாங்கீர் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்த பாஜ எம்பியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், எம்பி பதவியில் இருந்து நீக்க வேண்டும், மல்யுத்த வீராங்கனைகளை இந்திய பிரதமர் சந்தித்து பேச வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related posts

திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய நிலையில் ஓய்வு பெல் ஊழியர் சடலம் மீட்பு

திருச்சி ஜமால் முகமது கல்லூரி புதிய முதல்வர் நியமனம்

அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு கோடை வெப்பத்தை சமாளிக்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்