42 இடங்களில் கண்காணிப்பு கேமரா சிஐடியு மின் ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: புதிய மின் மீட்டர்களை உடனடியாக வழங்கிட கோரி சிஐடியு மின் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படும் புதிய மின் மீட்டரை காலதாமதம் இன்றி உடனடியாக வழங்கிட வேண்டும், வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணுடன் மின் எண் இணைக்கும் பணியில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்துவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக சிஐடியு மின் ஊழியர் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திட்ட துணை தலைவர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர். ராஜாராமன், திட்ட செயலாளர் ராஜேந்திரன், சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹனிபா,கோட்ட செயலாளர்கள் வீரபாண்டியன், குமார், கோட்டத் தலைவர் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

காலை உணவு திட்டத்தின் கீழ் 37,757 பள்ளி குழந்தைகள் பசியாறுகிறது

வெயில் தணித்த நல்ல மழை பொட்டலமிடப்பட்ட திண்பண்டங்களில் உப்பின் அளவை தவறாமல் குறிப்பிட வேண்டும்

கனமழை காரணமாக பருத்தி பயிர்களை சூழ்ந்த மழைநீர்