30 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை

 

மதுரை: மதுரையில் 30 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டுவைச் சேர்ந்தவர்கள் தனுஷ்கோடி(39), ரஞ்சித் குமார்(22). இவர்கள் இருவரும் கடந்த 2021ல் திருமங்கலம் பகுதியில் ஒரு ஆட்டோவில் 30 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தனர். அப்போது, திருமங்கலம் டவுன் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்ததுடன் கஞ்சா, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை ேபாதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் கே.விஜயபாண்டியன் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். இதன்படி, இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்