திருவில்லிபுத்தூர், ஜூன் 11: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் காவலர் குடியிருப்புகளில் மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் நேற்று மரக்கன்று நடும் விழாவை மாவட்ட எஸ்பி சீனிவாசபெருமாள் தொடங்கி வைத்தார். திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் மரக்கன்றுகளை டிஎஸ்பி சபரிநாதன் நட்டு வைத்து தொடங்கி வைத்தார். திருவில்லிபுத்தூர் காவல் நிலைய உட்கோட்ட பகுதியில் சுமார் 11 காவல் நிலையங்களில் 150க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.