100 சதவீத வாக்கு பதிவு கையெழுத்து இயக்கம்

 

திருவாரூர், மார்ச் 13: திருவாரூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் சாரு துவக்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து இதற்கான தேதி என்பது வரும் 15ம் தேதிக்கு மேல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் தொடர்பாக அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் 100 சதவீத வாக்கு பதிவு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வரும் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பணி குறித்து கலெக்டர்கள் தலைமையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை