முஷ்ணம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை உதவி இயக்குனர் ஆய்வு

முஷ்ணம், மே 21: முஷ்ணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதண்டவிளாகம், புடையூர், பாளையங்கோட்டை வடக்குபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஊராட்சிகளின் உதவி இயக்குனர் இன்பா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோதண்டவிளாகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடம், பசுமை வலைகட்டுதல் பணிகளை பார்வையிட்டார். நங்குடி ஊராட்சியில் பள்ளி கட்டிடம், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, விழுப்பெந்துறையில் சமையல் கூட கட்டிட பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். புடையூர் ஊராட்சியில் ஊராட்சி செயலக கட்டிடத்தை பார்வையிட்டார். பாளையங்கோட்டை வடக்கு பாளையம் ஊராட்சியில் சுகாதார வளாக கட்டிடம், கழிவுநீர் வடிகால் வாய்க்கால் பணி, அசுத்த தண்ணீரை சுத்தப்படுத்தும் உறிஞ்சிகுழி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முஷ்ணம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா, ஒன்றிய உதவி செயற்பொறியாளர் அனுசியாதேவி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்