வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கான ஆய்வுகூட்டம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை மயிலாடுதுறையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தி எம்பிக்கு சூரத் நீதிமன்றம் நேற்று இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி எம்பிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் இத்தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகரப் பகுதியில், ஸ்டேட் வங்கி அருகே மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நகரத் தலைவர் ராமானுஜம் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்….

Related posts

கீழ்வேளூர், திருக்குவளை பகுதியில் 3வது நாளாக பரவலாக மழை

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க பசுமை பந்தல் அமைப்பு

5 மாவட்ட போலீஸ் பாதுகாப்புடன் பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு நிலம் அளவிடும் பணி: வாழ்வாதாரத்தை அழித்துவிட்டதாக இடம் கொடுத்தவர்கள் கண்ணீர், கதறல்