வீட்டில் பட்டாசு தயாரித்த இருவர் கைது

 

ஏழாயிரம்பண்ணை, ஜூன் 5: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி, கணஞ்சாம்பட்டி உள்ளிட்ட பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் வெற்றி முருகன் தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கணஞ்சாம்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜேந்திரன் ஆகியோர் வீட்டின் அருகே அரசு அனுமதி இல்லாமல், எளிதில் தீப்பற்றக்கூடிய மருந்து செலுத்தியவெள்ள திரிகள், சுமார் 10கிலோ எடை கொண்ட வெடிகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் 2000 மதிப்புள்ள வெடி மற்றும் மருந்து பொருட்களை பறிமுதல் செய்த வெம்பக்கோட்டை காவல் துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related posts

திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்

காரியாபட்டி அருகே தனியார் சோலார் பிளான்ட்: கிராம மக்கள் எதிர்ப்பு

சாத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு