விஷக்கிழங்கு சாப்பிட்ட தொழிலாளி சாவு

திண்டுக்கல், ஏப்.25: திண்டுக்கல் அருகே சிறுமலை மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(43). கூலி தொழிலாளி.இவருக்கு திருமணமாகி மனைவியும்,3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன்,மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வம் கடந்த 21ம் தேதி விஷக்கிழங்கை சாப்பிட்டு உள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செல்வம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை