விருதுநகர், ஜன.19: விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் முரளிதரன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் துணை மின்நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. விருதுநகர் பழைய பஸ் நிலைய பகுதி, மேற்கு ரத வீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்கநகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி, குல்லூர்சந்தை, பெரிய வள்ளிகுளம், ஆர்.எஸ்.நகர், அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்ஜிஓ காலனி, வேலுச்சாமி நகர், கருப்பசாமி நகர், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூர், சத்திரரெட்டியபட்டி, முத்துராமன்பட்டி, பாண்டியன்நகரில் உள்ள முத்தால் நகரின் ஒரு பகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, கேகேஎஸ்எஸ்என் நகர், சத்யசாயி நகர், பேராலி ரோடு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். அதே போல் துலுக்கப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர் முக்குரோடு, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்கபுரம், வாய்ப்பூட்டான்பட்டி, இனாம்ரெட்டியபட்டி, கணபதி மில் குடியிருப்பு தென்பதி, ஒண்டிப்புலி நாயக்கனூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.