வானில் திரண்ட கருமேக கூட்டம் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பலி

விராலிமலை.ஏப்.4:விராலிமலை அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இறந்தார். விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி மனைவி ராஜாம்மாள் (70) கூலித் தொழிலாளி. இவர் வேலை நிமித்தமாக மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் இறந்தார்.இது குறித்து விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை