வணிக வரித்துறை அதிகாரியிடம் செல்போன் பறிப்பு

கோவை, ஆக. 20: கோவை ரேஸ்கோர்ஸ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் மகேந்திரன் (40). இவர், திருப்பூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து கோவை திரும்பினார். பின்னர் தனது வீட்டுக்கு செல்வதற்காக சிஎஸ்ஐ சர்ச் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்