ரேசன் அரிசி கடத்தியவர்கள் கைது

 

விருதுநகர், மார்ச் 9: விருதுநகர் உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சிவகாசி விஸ்வநத்தம் பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த திருநெல்வேலியை சேர்ந்த திருபாற்கடல்(27) மற்றும் செங்கோட்டையை சேர்ந்த ராஜசேகரன்(29) இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களிடம் இருந்த 23 மூடைகளில் 1,150 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது