மொபட் மீது லாரி மோதி முதியவர் பலி

ஆலங்குளம், மே 10: நெல்லை பேட்டை பவளமல்லிபூ தெருவைச் சேர்ந்தவர் பந்தே நவாஸ் (62). இவர் நேற்று மாலை மாறாந்தை ஊருக்கு கீழ்புறம் தென்காசி – நெல்லை மெயின்ரோட்டில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு சென்ற லாரி மோதியதில் பந்தே நவாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் ஓட்டியதால் விபத்து நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் கேரள மாநிலம் கொல்லம் கட்டமாழா காலனியைச் சேர்ந்த செயினுல் அப்தீன் மகன் அசரப் (48) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்