முத்தையாபுரத்தில் பேருந்து கண்டக்டரை தாக்கிய இருவர் கைது

ஸ்பிக்நகர், மார்ச் 6: பழையகாயல் இருவப்பபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன்(55). தனியார் பேருந்தில் கண்டக்டராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். முத்தையாபுரம் அருகே வந்தபோது பஸ்சில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த ரவி மகன் பொன் முத்துராமலிங்கம்(22), விருதுநகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஜீவா(31), ராமநாதபுரம் கல்லூர் காந்தி மகன் பழனி(34) உள்ளிட்டோர் கண்டக்டர் பார்த்திபனை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பார்த்திபன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட பொன் முத்துராமலிங்கம் மற்றும் ஜீவாவை கைது செய்தனர். பழனியை தேடி வருகின்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்