முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து

 

முத்துப்பேட்டை, மார்ச் 29:முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிதுரை மகன் முத்துவேல்(47). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் மகன் இளங்கோ(73) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இளங்கோ வீட்டு கொல்லையில் உள்ள தென்னம்பிள்ளைக்கு தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோ முத்துவேலுவை முதுகு, கை, கால் ஆகிய பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த முத்துவேல் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் கத்தியால் குத்திய இளங்கோவை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்