ஏழாயிரம்பண்ணை:விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சிலங தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. வெம்பக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. வெம்பக்கோட்டை அருகே ஏ.லட்சுமியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (58). இவர் காட்டுக்கு வேலைக்கு சென்ற போது, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.