மகளிர் தின விழா கொண்டாட்டம்

நிலக்கோட்டை, மார்ச் 22: நிலக்கோட்டை அருகே கந்தப்பக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் ெதாடக்கப்பள்ளியில் மகளிர் மேம்பாட்டு மற்றும் மகளிர் குழு சார்பாக தேசிய மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பொன்னருவி முன்னிலை வகித்தார். மகளிர் அமைப்பு தலைவி சத்தியசீலா வரவேற்றார். விழாவில் தேசிய மகளிர் தினம் பற்றியும். பெண்கள் முன்னேற்றம் பற்றியும் எடுத்து கூறப்பட்டது. தொடர்ந்து பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொண்டு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் மகளிர் குழு தலைவிகள் கஸ்தூரி, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

டயர் வெடித்ததால் சென்டர் மீடியனில் மோதிய தனியார் பஸ்

கல்லூரி வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது