போலீசார் கொடி அணிவகுப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 27: தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அச்சமின்றி வாக்களிக்க அழைப்பு விடுக்கும் வகையிலும், மாவட்ட எஸ்.பி., தங்கதுரை அறிவுறுத்தல் படி, கிருஷ்ணகிரியில் நேற்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. ஏடிஎஸ்பி விவேகானந்தன் அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பழையபேட்டை மீன்மார்கெட் அருகில் தொடங்கிய அணிவகுப்பு, காந்தி சாலை, ஆர்.சி., பள்ளி சர்க்கிள் வழியாக தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் ஏடிஎஸ்பி சங்கு, டிஎஸ்பி தமிழரசி, இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ் பிரபு, குலசேகரன், செந்தில்குமார், எஸ்.ஐ.க்கள் பிரபாகரன், பூர்ணிமா, சங்கீதா, மோகன்ராஜ், பாண்டியன், நாகமணி மற்றும் துணை ராணுவ படையினர் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

ரத்த அழுத்த பரிசோதனை முகாம்

டயர் வெடித்ததால் சென்டர் மீடியனில் மோதிய தனியார் பஸ்

கல்லூரி வேன் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது