பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்

 

தரங்கம்பாடி, மார்ச் 29: மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் உள்ள கிருஷ்ணா கல்வியியல் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. தரங்கம்பாடி தேர்தல் தனி தாசில்தார் முருகானந்தம், தேர்தல் துணை தாசில்தார் பாபு, ஆகியோர் தேர்தல் விழிப்புணர்வு குறித்த கையேடுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தேர்தலில் பங்கு பெற வேண்டிய அவசியம் குறித்து பேசினார்கள்.

மேலும் இதில் முதல் முறையாக வாக்கு அளிக்க கூடிய வாக்காளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தவறாமல் தங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் என்றும், 100 சதவீத வாக்கு பதிவிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். கல்லூரியின் தாளாளர் சுரேஷ், முதல்வர் மனோன்மணிபார்வதி, கிராம நிர்வாக அலுவலர் ராஜா கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர;கள், தேர்தல் ஆணைய ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்