பாரதியார் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு

 

கோவை, ஏப். 15: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில், துறைத்தலைவர் சந்திரா வரவேற்றார். துணைவேந்தர் பொறுப்புக்கு குழு உறுப்பினர் அஜீத்குமார் லால் மோகன், பதிவாளர் (பொ) ரூபா குணசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், முன்னாள் மாணவி (1987-1988) என்ஐசி தமிழ்நாடு துணை இயக்குனர் கீதாராணி தலைமை விருந்திரனாக பங்கேற்று தனது அனுபவங்கள், நினைவுகளை பதிவு செய்தார். இதில், 1996ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு மாணவர்கள் 25-ம் ஆண்டு விழாவை கொண்டாடினர்.

இந்த மாணவர் சந்திப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில், முதுகலை கணினி அறிவியல் மற்றும் முதுகலை தரவு அறிவியல் படிக்கும் மாணவர்களுடன் மாதந்தோறும் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டு, தொழில்நுட்ப பயிற்சி, இன்டர்ன்ஷிப் வழங்குதல், மாணவர்களுக்கான வழிக்காட்டுதல் போன்றவை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த முன்னாள் மாணவர் சந்திப்பின்போது மாணவர்கள் தங்களின் கடந்த கால நினைவுகளை நினைவு கூர்ந்து குழு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

 

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை