பாம்பு கடித்து பெயிண்டர் பலி

மேட்டுப்பாளையம், மே 27: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஜடையம்பாளையம் மார்க்கெட் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன் (60). இவரது மகன்கள் சையது இப்ராஹீம் (36),தெளபீக் (25). இதில், தெளபீக் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி பெயிண்டிங் வேலையை முடித்து விட்டு சக்தி நகரில் உள்ள தனது வீட்டிற்கு தெளபீக் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பாம்பு ஒன்று கடித்தது. அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்