பாஜ எம்.பியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, ஜூன் 7: பாஜ எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுமதி தலைமை வகித்தார். இதைத்தொடர்ந்து, ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்று பதக்கங்கள் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாஜ எம்பியும், மல்யுத்த விளையாட்டு ஆணையக்குழு தலைவருமான பிரிஜ் பூஷன் சரண்சிங் பாலியல் தொல்லை அளித்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜய மனோகரன், நிர்வாகிகள் ஜெகநாதன், சீனிவாசன், கண்ணன், செந்தில்நாதன், சந்திரமெளலி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

Related posts

பிளஸ் 1 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர் 80.8% தேர்ச்சி: 7 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று அசத்தல்

ஈஞ்சம்பாக்கத்தில் சாலை ஆக்கிரமிப்பு அகற்ற ₹3 லட்சம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், காவலர் கைது

மின்தடையை கண்டித்து சாலை மறியல்