தூத்துக்குடி விநாயகர் கோயிலில் ஒலிபெருக்கி திருடியவர் கைது

தூத்துக்குடி, மார்ச் 11: தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் செல்வ விநாயகர் கோயிலில் ஒலிபெருக்கியை திருடியவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி கோரம்பள்ளம், தெற்கு தெருவைச் சேர்ந்த சட்டநாதன் மகன் மந்திரம்(59), டிரைவராக உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோயிலின் பொறுப்பாளராகவும் உள்ளார். இவர் நேற்று முன்தினம் காலையில் கோயிலுக்கு சென்றபோது, அங்கிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள ஒலிபெருக்கி ஆம்பிளிபையரை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மந்திரம் அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி சிப்காட் எஸ்ஐ சண்முகம் வழக்குப்பதிந்து விசாரணை செய்தார். இதில் தூத்துக்குடி மீளவிட்டான், செல்வ விநாயகபுரத்தைச் சேர்ந்த தங்கமணி மகன் ஸ்டீபன்(40), என்பவர் கோயிலில் இருந்த ஒலிபெருக்கி ஆம்பிளிபயரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஸ்டீபனை சிப்காட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்