இந்திய மற்றும் அரபிய கட்டுமானக் கலையின் கலவையாக, துபாயில் பிரமாண்டமான முறையில் கட்டமைப்பட்டுள்ள புதிய இந்துக்கோயில் ஜெபல் அலி கிராமத்தில் திறக்கப்பட்டது. சகிப்புத்தன்மை, அமைதி, ஒற்றுமை ஆகிய சக்திவாய்ந்த தத்துவங்களை தாங்கி இந்தக் கோயில் நிறுவப்பட்டுள்ளது. இந்த கோயிலில் சிவன் சன்னதி, விஷ்ணு சன்னதி, ஷாய்பாபா சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோயில் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து இந்து பக்தர்களின் தரிசனத்துக்காக முறைப்படி திறக்கப்பட்டது.