நாகப்பட்டினம்,ஏப்.14: திருமருகல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அதற்கு ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.