திருக்கடையூரில் திமுகவில் புதிய உறுப்பினர்களுக்கு விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி

செம்பனார்கோயில்: திருக்கடையூரில் திமுகவில் புதிய உறுப்பினர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மத்திய ஒன்றிய திமுக சார்பில் காலமநல்லூர் ஊராட்சியில் திமுக உறுப்பினர் சேர்க்கும் விண்ணப்பம் திருக்கடையூர் உள்ள கட்சி அலுவலகத்தில் உடன்பிறப்புகளாய் இணைவோம் திமுகவில் புதிய உறுப்பினர்கள் விண்ணப்பங்கள் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் அமுர்த விஜயகுமார் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் மதியழகன் வரவேற்று பேசினார். முகாமில் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை சொல்லி திமுக கழகத்தில் உறுப்பினராக சேர்ப்பதற்கு உறுப்பினர் விண்ணப்பம் வழங்கினர். இதில் மாவட்ட பிரதிநிதி சிவகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில், கட்சி பிரமுகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை