திமுகவில் பாஜவினர் இணைப்பு நிகழ்ச்சி

கூடலூர் ஏப்.4: கூடலூர் நகர திமுக சார்பில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கூடலூர் நகரம் வார்டு எண்-19 கேகே நகர் பகுதியில் வார்டு செயலாளர் கனகராஜ் தலைமையில் கூடலூர் நகர கழக செயலாளர் இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான திராவிடமணி திமுக கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து, துணை செயலாளர் நாகேஸ்வரி இனிப்பு வழங்கினார்.

தொடர்ந்து கூடலூர் நகர பாஜ எஸ்சி பிரிவு தலைவர் கங்காதரன் மற்றும் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பாஜவினர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஜபருல்லா, மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், பேரூர் கழக செயலாளர் சுப்பிரமணி, தலைமை கழக பேச்சாளர் தங்கராஜ், வார்டு கழக அவைத்தலைவர் சுப்பையா, நகர் மன்ற உறுப்பினர் நிர்மல் மகளிர் அணி ராணி, செல்லம்மாள் மற்றும் செல்வராஜ் மணி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பிரதிநிதி மூசா நன்றி கூறினார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்