திண்டுக்கல்லில் முற்றுகை போராட்டம்

 

திண்டுக்கல், ஜூன் 20: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ரியாஸ் அகமது தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் அழகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்பாட்டத்தில் துாய்மை பணியாளர்களை தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்க கூடாது. தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்து திண்டுக்கல் மாநகராட்சியே நேரடியாக பணி வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின் மாநகராட்சி அதிகாரியிடம் மனு அளித்தனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது