தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கம் உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு.!

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தலைவர் சே.ம.நாராயணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம் பாராளுமன்றம், சட்டமன்றம், ஊரக உள்ளாட்சி மற்றும் புதியதாக உருவான 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தொடர்ந்து திமுகவுகு ஆதரவு தெரிவித்து வருகிறது. அதேபோன்று, வருகிற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவிற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம் முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. தங்கள் தலைமையிலான ஆட்சி தமிழகம் முன்னேற்ற பாதைக்கு சென்று கொண்டு இருக்கிறது. உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று உழைத்துக்கொண்டே இருக்கிறீர்கள். தமிழக மக்களுக்கு நீங்கள் செய்யும் சேவைகளை அனைத்து தர மக்களும் வெகுவாக பாரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதன்மூலம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நூறு சதவீத வெற்றி பெறுவீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

காவிரி உரிமையை தமிழ்நாடு அரசு நிலைநாட்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

தென் மாநிலங்களில் பாஜக நோட்டா விற்கு கீழ் தான் வாக்கு பெறும்: செல்வப்பெருந்தகை காட்டம்!