நாசரேத், ஏப். 17: காயல்பட்டினம் அருகே உள்ள ஓடக்கரையை சேர்ந்தவர் ஞானசேகரன் மகன் அமுதன் (25). கடந்த 4 வருடங்களுக்கு முன் நாசரேத் தனியார் கல்லூரியில் இரவு நேர விடுதி காப்பாளராக பணியில் சேர்ந்தார். நேற்று அதிகாலையில் பணியை முடித்துவிட்டு தூங்கச் சென்றவர், விடுதிக்கு பின்னால் உள்ள மரத்தில் கயிற்றால் தூக்கில் தொங்கியுள்ளார். இதுகுறித்து ஞானசேகரன் கொடுத்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.