தண்ணீர் மோட்டாரை திருடிய வாலிபர் சிக்கினார்

திங்கள்சந்தை, பிப். 4: இரணியல் அருகே ₹45 ஆயிரம் மதிப்புள்ள தண்ணீர் மோட்டாரை திருடிய வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திங்கள்சந்தை அருகே உள்ள பாளையம் அடுத்த சரல்விளை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் செந்தில்குமார் (40). இவர் அப்பகுதியில் மோட்டார் காயல் ரீவைன்டிங் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை செந்தில்குமார் கடையை திறக்க வந்தார். அப்போது சுமார் ₹45 ஆயிரம் மதிப்புள்ள ஆழ்துளை கிணற்றில் பயன்படுத்தும் தண்ணீர் மோட்டாரை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே பூசாஸ்தான்விளையில் உள்ள திரவியம் என்பவர் ஆக்கர் கடையில் இளைஞர் ஒருவர் மோட்டார் விற்க வந்தார்.

இதுகுறித்து செந்தில்குமாருக்கு தகவல் தெரிந்தது. உடனடியாக அவர் ஆக்கர் கடையில் வந்து பார்த்தார். அப்போது அந்த மோட்டார் செந்தில்குமார் கடையில் காணாமல் போன மோட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மோட்டாரை விற்பனை செய்ய வந்த கோவிலான்விளையை சேர்ந்த ஷாஜி (30) என்ற வாலிபரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து இரணியல் போலீசில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ராஜபாளையம்

ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை திருட்டு

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை