டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் பாலக்கோடு வாலிபர் பங்கேற்பு

தர்மபுரி, மார்ச் 24: பாலக்கோடு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் சக்திவேல்(21). பிஎஸ்சி பட்டதாரியான இவர், கல்லூரியில் படிக்கும்போது இருந்து கடந்த 3 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வருகிறார். ரெட் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். இதையடுத்து, வரும் 25ம் தேதி நேபாளத்தில் நடைபெறும் 2023-2024ம் ஆண்டுக்கான 3வது தெற்காசிய சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் விளையாட சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டியில் இந்தியா, இலங்கை, நேபாளம் நாடுகள் பங்கேற்கின்றன. இந்திய அணிக்காக சக்திவேல் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்