டூவீலர்கள் மோதியதில் 3 பேர் படுகாயம்

சாத்தூர், ஏப்.7: சாத்தூர் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (26). இவர் விருதுநககர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள புல்வாய்பட்டிக்கு, டூவீலரில் வந்து கொண்டிருந்தார். பின்னர் தனது உறவினர் மற்றொரு கருப்பசாமியுடன் (60) எட்டையபுரத்திற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

சாத்தூர் அருகே தனியார் மில் உள்ள பகுதியில் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே அதே பகுதியை சேர்ந்த சரவணம் ஓட்டி வந்த டூவீலர், இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட எட்டையபுரத்தை சேர்ந்த கருப்பசாமி, புல்வாய்பட்டியை சேர்ந்த மற்றொரு கருப்பசாமி மற்றும் சரவணன் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். 3 பேரும் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை