சேடபட்டி அருகே டூவீலரில் கஞ்சா கடத்தல் பெண் உட்பட 2 பேர் கைது

 

பேரையூர், மே 4: சேடபட்டி அருகே டூவீலரில் கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பேரையூர் தாலுகா, சேடபட்டி பகுதியில் மதுரை புறநகர் எஸ்பி சிவபிரசாத் தலைமையிலான ஸ்பெஷல் டீம் போலீசார் கஞ்சா விற்பனை தடுப்பது சம்மந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேடபட்டி அருகேயுள்ள பெரியகட்டளையில் தோட்டத்திலிருந்து டூவீலரில் கஞ்சா கடத்தி பணராஜா என்பவரை ரோந்து பணியிலிருந்த எஸ்பி ஸ்பெஷல் டீம் போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் மாயத்தேவர் மனைவி பூமா (61), வீரபாண்டி மகன் பணராஜா (32), என தெரியவந்தது. இவர்கள் இருவரையும், டூவீலர் மற்றும் 4 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, சேடபட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சேடபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது