சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் கட்டிய பத்மாவதி தாயார் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றதை அடுத்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தி.நகர் ஜிஎன் செட்டி சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் புதிதாக ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் ஏராளமானவர் திரண்டனர். ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். பத்மாவதி தாயார் மற்றும் சீனிவாசா சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

Related posts

உதகை மலர் கண்காட்சி தொடங்கியது : சுற்றுலா பயணிகள் பிரமிப்பு!!

2024 யூரோ விஷன் பாடல் போட்டியின் புகைப்பட தொகுப்பு ..!!

டெல்லியில் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார் குடியரசு தலைவர்… விஜயகாந்துக்கான பத்மபூஷன் விருதை பெற்றார் பிரேமலதா..!!