ஓசூர், ஏப்.6: ஓசூரில் பிரசித்தி பெற்ற கல்யாண காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணி சுவாமிக்கும், காமாட்சி ஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள், கல்யாண சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன், அம்பாள் சாமிகளுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஓசூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.