சிறுமி மாயம்

 

கோவை, ஜூன் 10: கோவை நீலிகோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராணி. கூலி தொழிலாளி. இவருக்கு 14 வயது மகள் ஒருவர் உள்ளார். ராணி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்ந்து வருகிறார். சிறுமிக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக 8-ம் வகுப்பு முடித்து விட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராணி வேலைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது சிறுமி வீட்டில் இல்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, ராணி கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

Related posts

செங்காட்டுபட்டியில் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம்

உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயிலில் 21ம் தேதி வைகாசி விசாக தேரோட்டம்

மணப்பாறை அருகே குடும்ப தகராறில் பயங்கரம் மனைவி உள்பட 3 பேரை கத்தியால் குத்தியவர் கைது