சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது

திண்டிவனம், மே 24: திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் இளவழகி தலைமையிலான போலீசார் மரக்காணம் அடுத்த அடசல் கிராமத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அடசல் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்ராயன் மகன் சிங்காரம்(42), என்பவரது வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டபோது, வீட்டின் பின்புறம் விற்பனைக்காக 125 லிட்டர் விஷ நெடி உள்ள சாராயம் மற்றும் 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 10 சாராய பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், சிங்காரம் என்பவரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்

திருச்சுழி-உடையானம்பட்டி இடையே குண்டாறு குறுக்கே உயர்மட்ட பாலம்: கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

பெண் அடித்து கொலை? கண்மாயில் உடல் மீட்பு