சட்டவிரோத மது விற்பனை; 8 பேர் கைது

ஈரோடு, மார்ச் 27: சட்டவிரோத மது விற்பனைய தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி,சித்தோடு, ஈரோடு வடக்கு, அந்தியூர், கோபி, ஆசனூர், கவுந்தப்பாடி, பவானிசாகர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அரசு மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சென்ன நாயக்கனூரைச் சேர்ந்த நிஷாந்த் (37), ஈரோடு சம்பத் நகரைச் சேர்ந்த பாண்டியன் (32), பெருமாபாளயத்தைச் சேர்ந்த பழனிசாமி (44), கவுந்தப்பாடியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (37), புதுப்பாளையத்தைச் சேர்ந்த சண்முகம் (44), கவுந்தப்பாடியைச் சேர்ந்த பாலமுருகன் (39), ராஜகோபால் (31), பவானிசாகரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (42) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்