கோவில்பட்டி நகர்நல மையத்திற்கு மருத்துவ உபகரணங்கள்

கோவில்பட்டி, செப். 21: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பில் கோவில்பட்டி நகர்நல மையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. கோவில்பட்டி நகர செயலாளரும், நகராட்சி சேர்மனுமான கருணாநிதி தலைமை வகித்து மருத்துவ உபகரணங்கள் வழங்கினார். யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், சிவசுப்பிரமணியன், நகர துணை செயலாளர் அன்பழகன், அவைத்தலைவர் முனியசாமி, தாமோதரன், வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சவுந்திரராஜன், துணை தலைவர்கள் முருகராஜ், ஜான் பிரிட்டோ, துணை அமைப்பாளர்கள் ராமையா, சீனிவாசன், நகர்நல மருத்துவ அலுவலர் டாக்டர் ராமமூர்த்தி, ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை