கோரிசோலை தர்காவில் சந்தனக்கூடு விழா

 

ஊட்டி, நவ‌.10: ஊட்டி அருகே கோரிசோலை தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது. ஊட்டி அருகே கோரிசோலை பகுதியில் உள்ள ஹஜ்ரத் சையது ஹசன் ஷா பாபா காதிரி ரஹ்மத்துல்லா தர்காவில் வருடாந்திர உரூஸ் சந்தனக்கூடு விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் பிறைக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தர்காவில் சந்தனம் பூசல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். விழாவை ஒட்டி தர்கா முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. விழா ஏற்பாடுகளை முத்தவல்லி நூர் முகமது உமர் சேட் தலைமையில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related posts

வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுதினம் 1,465 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

குழாய் இணைக்கும் பணி அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையம் இன்று செயல்படாது: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பதை தவிர்க்க வேண்டும்: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்