கே.வி.குப்பம் அருகே மாட்டு கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீவைப்பு

கே.வி.குப்பம் :  கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் ஊராட்சி ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்த   முருகேசன் மகன் சுபாஷ்(35),விவசாயி. இவர்  வளர்த்து வரும் மாடுகளை இரவில் கட்டுவதற்காக சவுக்கு கட்டையில் தென்னை ஓலை கொட்டகை அமைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்  இரவு  அந்த ஓலை கொட்டகை மர்மமான முறையில் எரிந்து  கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த சுபாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயினை அணைக்க முயன்றார். ஆனால் தீ மள மளவென பிடித்து கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது. அப்போது, கொட்டகையில் மாடுகள் இல்லதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.     இதுகுறித்து நேற்று சுபாஷ் லத்தேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, முன்விரோத காரணமாக மர்ம நபர்கள் யாராவது கொட்டகைக்கு தீ வைத்தார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்….

Related posts

கார் டயர் வெடித்து விபத்து: எம்எல்ஏ மகள், 3 பேர் காயம்

பேஸ்புக் மூலம் கடல் கடந்து காதல்: தென்கொரியா வாலிபருக்கும் கரூர் பெண்ணுக்கும் டும்…டும்…

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்