கேளம்பாக்கம் அருகே ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் தற்கொலை

திருப்போரூர், மே 18: கேளம்பாக்கம் அருகே ஓய்வுபெற்ற வங்கி பெண் மேலாளர் 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (65). இவர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி, ஓய்வுபெற்று விட்டார். இந்நிலையில், கேளம்பாக்கம் அருகே படூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த. தனது மகள் வீட்டிற்கு 2 வாரங்களுக்கு முன்பு வந்திருந்தார். அவருக்கு கால் மரத்துப்போகும் நோய் இருந்ததாகவும், இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வேதனையுடன் இருந்த அவர் நேற்று காலை நடைபயிற்சி சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து பெண் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக, கட்டிட செக்யூரிட்டிகள் தகவல் கொடுத்தனர். பலரும் சென்று அங்கு பார்த்தபோது அவது ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் ராஜேஸ்வரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஓய்வு பெற்ற வங்கி பெண் மேலாளர் தற்கொலை செய்துக் கொண்டது ஏன் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு

மாணவர் சேர்க்கைக்கு 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்