குளியல் தொட்டியில் வழுக்கி விழுந்து முதியவர் பலி

 

விருதுநகர், மார்ச் 25: விருதுநகர் அருகே குளியல் தொட்டியில் வழுக்கி விழுந்த முதியவர் பலியானார். விருதுநகர் அருகே உசிலம்பட்டியை சேர்ந்தவர் அருணாச்சலம் (74). சென்னையில் உள்ள மகன் வீட்டில் வசித்த இவர், கடந்த பிப்.4ல் வீட்டில் இருந்து வெளியேறினார். பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து சென்னை புதுவண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை தேடி வந்தனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 9ம் தேதி விருதுநகர் அருகே உள்ள கே.உசிலம்பட்டி பொதுக்குளியல் தொட்டியில் வழுக்கி விழுந்து கிடந்துள்ளார். கே.உசிலம்பட்டியில் உள்ள மற்றொரு மகன் பாலகுமார், அருணாச்சலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாலகுமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்