சென்னை: குளிப்பதற்கு வைத்திருந்த வெந்நீரில் விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. அம்பத்தூர் வெங்கடாபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ் – கவுசல்யா தம்பதி தங்களது வீட்டில் வண்ண மீன்களை வளர்த்து வந்தனர். மீன் தொட்டியை வைக்க வீட்டில் மேஜை இல்லாத காரணத்தால், வீட்டின் ஒரு மூலையில் உள்ள தரையில் ைவத்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், யுவராஜ் வேலைக்கு சென்றிருந்தபோது, கவுசல்யா தனது ஒன்றரை வயது குழந்தை மீனாட்சியை வீட்டில் விட்டுவிட்டு, கழிவறை சென்றுள்ளார். அப்போது, குழந்தை மீனாட்சி தவழ்ந்து சென்று மீன் தொட்டியை எட்டி பிடித்து, தொட்டிக்குள் இருந்த வண்ண மீன்களை பிடிக்க முயன்றபோது, தடுமாறி தலைகுப்புற மீன் தொட்டிக்குள் விழுந்ததில் மூச்சுத்திணறி இறந்தது. இந்த சோக சம்பவம் நடந்த அடுத்த நாளில் ஊத்துக்ேகாட்டை அருகே வெந்நீரில் மூழ்கி குழந்தை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் ரசாக் (28), கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெரினா (24). இவர்களது மகன் அஜ்மீர் (2). கடந்த 10ம் தேதி, ஜெரினா மகன் ரசாக்கை குளிக்க வைப்பதற்காக அடுப்பில் வெந்நீர் காயவைத்துள்ளார். வெந்நீரை அன்னக்கூடையில் ஊற்றியுள்ளார். அதன் அருகில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. ஜெரினா, சோப்பு துண்டை எடுக்க வீட்டிற்குள் சென்றபோது, அருகில் இருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக கால் இடறி வெந்நீருக்குள் விழுந்தது. உடனே குழந்தை அஜ்மீர் அலறி கூச்சலிட்டது. சத்தம்கேட்டு ஓடிவந்த தாய் ஜெரினா, படுகாயமடைந்த குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த குழந்தை அஜ்மீர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று இறந்தது. …