குன்னத்தில் வாய்த்தகராறில் தந்தையை கீழே தள்ளி கொலை செய்த மகன் கைது

குன்னம், மே 24: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழக்குடிக்காடு கிராமத்தில் வசிப்பவர் செல்வராசு (57). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு வள்ளி என்ற மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி செல்வராசுக்கும், அவரது மகன் வெற்றிவேல் (29) இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வாய் தகராறு நடந்தது. அப்போது வெற்றிவேல் எதிர்பாராத விதமாக திடீரென தனது தந்தையை கீழே தள்ளிவிட்டார். இதில் கீழே விழந்ததில் பலத்த காயமடைந்த செல்வராசை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராசு இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்